தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது தமிழில் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் கௌதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். திருமணத்திற்குப் பின் வரும் முதல் காதலர் தினத்தை ஒரு முன்னணி நடிகை பொதுவாக பெரிய ஸ்டார் ஓட்டலில் தான் கொண்டாடுவார். ஆனால், காஜல் அகர்வால் பொள்ளாச்சியில் உள்ள ஒரு சாதாரண மெஸ்ஸில் தன்னுடைய காதலர் தின டின்னரை சாப்பிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
பொள்ளாச்சியில் ஒரு தம்பதியினர் நடத்தும் அந்த மெஸ்ஸுக்குச் சென்று சாப்பிட்டதோடு அவர்களைப் பற்றியும் பாராட்டி பதிவிட்டுள்ளார். “சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா ஆகியோர் அதிக அன்புடன் உணவைப் பரிமாறுவார்கள். அதனால்தான் கடந்த 27 வருடங்களாக அவர்களது உணவு தொடர்ந்து சுவையாக உள்ளது. இந்த சிறிய கடைக்கு நான் கடந்த ஒன்பது வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன்,” எனக் கூறி அந்த தம்பதியினருடன் புகைப்படம் எடுத்து அதையும் பகிர்ந்திருக்கிறார்.
காஜல் அகர்வாலின் இந்த எளிமையான குணத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.