இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ள மலையாள படம் சால்மன். 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள இந்த படத்தை டால்ஸ் மற்றும் கட்டுமக்கான் படங்களை இயக்கிய ஷலீல் கல்லூர் இயக்கி உள்ளார். 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி, இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழில் வர்தா என்ற பெயரில் வெளியாகிறது.
இப்படத்தில் விஜய் யேசுதாஸ் ஜோடியாக ஜொனிடா நடித்துள்ளார். இப்படம் ரொமான்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது . ஸ்ரீஜித் இசை அமைத்துள்ளார், ராகுல் மற்றும் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஷலீல் கல்லூர் கூறியதாவது: சால்மன் என்பது ஒருவகை கடல் மீன். பிறக்கும்போதே அநாதையான இந்த மீன் அனைத்து தடைகளையும் சூழல்களையும் தாண்டி கண்டம் விட்டு கண்டம் கடலிலேயே பயணிக்கிறது. அதுபோலவே இப்படத்தின் கதை வாழ்வின் கறுப்பு பக்கங்களை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை இப்படம் பேசுவதால் இப்படத்திற்கு சால்மன் என்று பெயரிடப்பட்டுள்ளது. என்றார்.