தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழாவில் தமிழ்படங்களின் போட்டி பிரிவில் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் உள்பட 13 படங்கள் போட்டியிடுகின்றன. இந்த படங்களில் அதிகம் அறியப்படாத படங்களும் இருக்கிறது. அதில் ஒன்றுதான் தி மஸ்கிட்டோ பிலாசபி (கொசுவின் தத்துவம்).
இது ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் 6 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்கிறார்கள். வசனமும் இன்றி, ரீடேக்கும் இன்றி எடுக்கப்பட்டுள்ளதாம். பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற லென்ஸ் படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார்.
படம் பற்றி தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அப்பட்டமான நிதர்சனத்தை உள்ளடக்கிய இப்படம் காலங்காலமாக தமிழ் சினிமாவில் வேரூன்றியுள்ள புனைவுக் கதை சொல்லல் வடிவத்துடன் மோதுவது அனைவரின் எதிர்பார்ப்பினையும் கூட்டியுள்ளது. தன் குறுகிய திரை நேரத்தையும் குறைந்த பட்ஜெட்டினையும் சுமந்தபடி தமிழ் சினிமாவின் பிரமாண்டங்களுக்கு இடையே இச்சிறிய கொசுவின் தத்துவம் பறக்கவுள்ளது. இத்திரைப்படம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு எடுக்கப்பட்டது . எழுதப்பட்ட திரைக்கதை வசனம் எதுவுமின்றி வெறும் 6 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட படம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.