துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் த்ரிஷ்யம். மலையாள சினிமாவில் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது. 100 கோடி வசூல், வெள்ளிவிழா என த்ரிஷயம் படைத்த சாதனைகள் பல. குறிப்பாக இந்திய மொழிகள், சீன மொழிகளில் ரீமேக் ஆனது. தற்போது ஹாலிவுட்டிலும் தயாராகிறது.
ஒரு குடும்ப தலைவன் தனக்கிருக்கும் சமயோசித அறிவைக் கொண்டு தன் குடும்பத்தை ஒரு கொலை குற்றத்தில் இருந்து காப்பாற்றுவதுதான் த்ரிஷ்யத்தின் ஒன்லைன் ஸ்டோரி. மோகன்லாலும், மீனாவும் குடும்ப தலைவனும், தலைவியாகவே வாழ்ந்தார்கள். தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி அதவும் வெற்றி பெற்றிருக்கிறது. 2ம் பாகம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனாதான் நடிக்கிறார்கள்.
இப்போது தமிழிலும் ரீமேக் ஆக பேச்சு நடக்கிறது. முதல் பாகத்தில் நடித்த கமலும், கவுதமியும் தற்போது பிரிந்து விட்டதால் படம் தொடங்குவதில் சின்ன பிரச்சினை இருக்கிறது. இந்த நிலையில் த்ரிஷ்யத்தின் 3ம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாராகி விட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: த்ரிஷ்யம் 3ம் பாகத்தை தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன். அதற்கான ஐடியாவும் இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு இருக்கிறது. மோகன்லாலும், ஜீத்து ஜோசப்பும் இதுகுறித்து பேசியிருக்கிறார்கள் என்கிறார் ஆண்டனி.