தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வருசம் 16 படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. கோயில் கட்டி ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென நிரந்தர இடம் பிடித்தவர். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2000ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பு. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். தற்போது நடிப்பு மட்டுமின்றி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தன்னிடம் சுந்தர் சி காதலை தெரிவித்து 26 ஆண்டுகள் ஆகி விட்டதை மகிழ்ச்சியுடன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் குஷ்பு. அந்தப் பதிவில் அவர், 'சுந்தர் சி காதலைத் கூறி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. அப்போது எது உங்களது காதலை உடனே ஏற்க வைத்தது என்று எனக்கு தெரியவில்லை. அந்த மாதிரியான நேரத்தில் உள்ளுணர்வை நம்பி எடுக்கும் முடிவு சிறப்பாக அமையும். அதையேதான் நானும் செய்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.