இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கன்னடத்தில் 2016ல் வெளிவந்த 'கிரிக் பார்ட்டி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தானா. தெலுங்கில் தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார்.
தமிழில் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். அடுத்து அவரை தங்களது படங்களிலும் நாயகியாக நடிக்க வைக்க சில முன்னணி நடிகர்கள் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், ராஷ்மிகாவின் டார்க்கெட்டோ பாலிவுட்டை நோக்கி இருக்கிறது.
தற்போது ஹிந்தியில் 'மிஷன் மஜ்னு' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்து அமிதாப்பச்சன் நடிக்கும் 'டெட்லி' படத்திலும் நடிக்க உள்ளார். சமீபத்தில் ராஷ்மிகா நடித்த ஹிந்தி ஆல்பமான 'டாப் டக்கர்' வீடியோ 5 கோடி பார்வைகளை நெருங்க உள்ளது. இதனால் ராஷ்மிகா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.
தெலுங்கைப் போலவே ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என முயற்சித்து வருகிறாராம். இதனால், தற்போது மும்பையில் சொந்தமாக விலை உயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளாராம். ஹைதராபாத்திலும் இது போலவே ஒரு பிளாட்டை ஏற்கெனவே வாங்கியுள்ளார் ராஷ்மிகா.
அதனால், இனி தமிழ்ப் படங்களில் நடிக்க ராஷ்மிகா ஆர்வம் காட்டுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.