ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்காக புதிதாக, 'மாஜ்ஜா' என்ற பெயரில், இசை நிறுவனத்தை ஏ.ஆர்.ரகுமான் துவக்கியுள்ளார். சென்னையில் விரைவில், 'யாழ்' என்ற, இசை திருவிழாவையும், அவர் நடத்த உள்ளார்.
கிராமி மற்றும் ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்; புதிய முயற்சியாக தொழில்நுட்பம் சார்ந்து, 'மாஜ்ஜா' என்ற, புதிய இசை நிறுவனத்தை துவக்கியுள்ளார். அடுத்த தலைமுறை இசை கலைஞர்களின் திறன்மிகு படைப்புகளை, உலகளவில் கொண்டு செல்வதை குறிக்கோளாக கொண்டு, இதை ஆரம்பித்துள்ளார்.அத்துடன், யாழ் இசை திருவிழா வாயிலாக, இளம் திறமையாளர்களையும் வெளிப்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:மாஜ்ஜா நிறுவனம், சுயாதீன இசை முயற்சிகளுக்கான மேடையாக இருக்கும். படைப்பு சுதந்திரத்தின் முழுமையை அளிப்பதுடன், திறமையாளர்களை உலகளவில் எடுத்து செல்வதே, இதன் குறிக்கோள்.திறமையாளர்கள் பலர் உள்ளனர். அவர்கள், எந்த ஒரு அடையாளமும் வெளிப்படாமலேயே, காணாமல் போய்விடுகின்றனர். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், திறமையானவர்களுக்கான தடைகள் உடைக்கப்படும். தொழில் நுட்பத்தால் இசைக்கலைஞர்களுக்கு புது யுகம் படைப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.