ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தபோது யூனிட் உள்ள 4 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு, ரஜினிக்கும் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.
அதையடுத்து அண்ணாத்த வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என்று பட நிறுவனம் அறிவித்த நிலையில் ரஜினி தவிர மற்ற நடிகர்-நடிகைகளின் காட்சிகள் அனைத்து படமாக்கப் பட்டு விட்டதால் ரஜினி எப்போது வருகிறாரோ அப்போது தான் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு என்று சொல்லி வந்தார் சிறுத்தை சிவா.
இந்நிலையில், மார்ச் 15-ந்தேதில் முதல் மீண்டும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்பிறகு தமிழ்நாட்டில் பொள்ளாச்சி உள்பட சில பகுதிகளில நடக்கும் படப்பிடிப்புகளிலும் அடுத்தடுத்து கலந்து கொள்கிறாராம் ரஜினி. இதனால் மார்ச், ஏப்ரலோடு அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தெரிய வந்துள்ளது.