ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் நிரஞ்சனி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகள் தான் நிரஞ்சனி.
ஆடை வடிவமைப்பாளரான நிரஞ்சனி, டைரக்டர் தேசிங்கு பெரியசாமி இடையே காதல் ஏற்பட்டது. சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தனது தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தார் நிரஞ்சனி. இந்த போட்டோவை அகத்தியனின் மூத்த மகளும் நடிகையுமான விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த போட்டோக்கள் வைரலானது.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி, நிரஞ்சனியின் திருமணம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திரையுலகை சேர்ந்த பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.