அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? |

கொரோனா காலகட்டத்தில் பல நடிகர்கள் ஓய்வாக இருந்தபோதும், மலையாள நடிகர் பஹத் பாசில் மட்டும் வீட்டுக்குள்ளேயே படப்பிடிப்பை நடத்தி, ஒரு படத்தையே அந்த சமயத்தில் ரிலீஸ் செய்தும் விட்டார். தொடர்ந்து பரபரப்பாக நடித்துவந்த பஹத் பாசில், தற்போது நடித்துவரும் 'மலையன் குஞ்சு' என்கிற படப்பிடிப்பின்போது, உயரமான இடத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். குறிப்பாக மூக்கில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பஹத் பாசில், தற்போது வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார். இந்தநிலையில் அவர் கட்டிலில் படுத்து ஓய்வெடுத்து வரும் புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அவரது மனைவி நடிகை நஸ்ரியா, 'ஆல் இஸ் வெல்” என கூறியுள்ளார். பஹத் பாசில் நடித்து வரும் இந்தப்படத்தை அவரது தந்தையான இயக்குனர் பாசிலே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..




