தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி, மார்க்., கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர். அந்த கட்சியின் மாநாடுகளில் பேசி இருக்கிறார். நண்பர்கள் சிலருக்காக தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார். ஆனால் நேரடி அரசியலில் ஈடுபட்டதில்லை. ஆனால் இந்த முறை அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக மலையாள ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனை மம்முட்டி மறுத்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் நான் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளிவருவது வழக்கமான ஒன்றுதான். நான் அதை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. அதுபற்றி எந்த கருத்தும் சொல்வதில்லை. நான் தீவிர அரசியலில் இப்போதைக்கு ஈடுபடப்போவதில்லை. அதனால் தேர்தலில் போட்டியிடப்போவதுமில்லை.
இதுவரை எந்த அரசியல் கட்சியும் என்னை போட்டியிடச் சொல்லி கேட்கவில்லை. பிற்காலத்தில் அரசியலுக்கு வருவேனா தேர்தலில் போட்டியிடுவேனா என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். நான் சினிமாவில் செய்து கொண்டிருப்பதும் அரசியல் தான். அதை இன்னும் தீவிரமாக செய்வேன். என்றார்.