ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
80களில் தனது கவர்ச்சி ஆட்டத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அனுராதா, பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். இவரது மகள் அபிநயஸ்ரீயும் படங்களில் நடித்தார். ஆனால் பெரிய வாய்ப்புகள் அமையாததால் நடன இயக்குனர் ஆனார். அனுராதாவின் மகன் கெவின் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜே.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள பூம் பூம் காளை படத்தில் கெவின் ஹீரோவாக நடிக்கிறார். ஆர்.டி.குஷால் குமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் சிவலிங்கா படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, சச்சு, கிரேன் மனோகர், அபிநயஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஆர்.டி.குஷால் கூறியதாவது: நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள். நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்புகிறாள். நாயகனோ திருமணம் முடிந்த பின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே. அது நடப்பது எப்போது என பூம் பூம் காளையாக அலைபாய்கிறான். இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறோம். என்றார். படம் நாளை வெளிவருகிறது.