இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் என்ன தான் பிரபலமானவர்களாக, திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான சம்பளம் என்பது ஹீரோக்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. இதுகுறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் சமந்தா.
அவர் கூறுகையில், ''நடிகைகளுக்கு சம்பளம் என்பது குறைவான அளவே தரப்படுகிறது. ஒரு நடிகை முதல் மூன்று நடிகைகளில் ஒருவராக முன்னணியில் இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் ஹீரோக்களை ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது. அந்த சம்பளமானது முதல் 20 நடிகர்கள் பட்டியலில் இல்லாத நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட குறைவானதாகவே உள்ளது. இதை சுட்டிக்காட்டி நடிகைகள் சம்பளத்தை அதிகமாக கேட்டால் பிரச்சினையாக்கி விடுகிறார்கள். ஆனால் ஹீரோக்கள் படத்துக்குப்படம் கோடிகளை உயர்த்தினாலும் மறுபேச்சு பேசாமல் கொடுக்கிறார்கள். இது என்ன நியாயம் என்று தனது கருத்தினை துணிச்சலாக தெரிவித்துள்ளார் சமந்தா.