சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க விபிஎப் நிறுவனங்கள் வருகிற மார்ச் 31ந் தேதி வரை சலுகை கட்டணத்தை அறிவித்தது. அது தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு தியேட்டர் அதிபர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதோடு தற்போது பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடும் திட்டத்துடன் இருக்கிறது.
விபிஎப் கட்டணம் மற்றும் ஓடிடி வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (18ம் தேதி) நடக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசப்படுவதால் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பி உள்ளது.