கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
சண்டைக்கோழி 2 மற்றும் செக்கச் சிவந்த வானம் படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்த அப்பாணி சரத், ஜீ தமிழில் வெளியான ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் புகழ்பெற்றார். தற்போது ஆரி நடிக்கும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதுதவிர மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரும் சிகாமணி மற்றும் சகலகலாசலா போன்ற திரைப்படங்களை இயக்கியவருமான வினோத் குருவாயூர் இயக்குகிறார். ஜல்லிக்கட்டு பற்றிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ரிச் மல்டி மீடியா தயாரிக்கிறது.
படம் குறித்து இயக்குனர் வினோத் குருவாயூர் கூறியதாவது: தமிழ்நாடு, அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. தமிழ் திரைப்படம் இயக்க வேண்டும் எனும் எனது கனவு தற்போது நிறைவேறி உள்ளது. தமிழ் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது. அது குறித்து நன்கு ஆராய்ந்து இந்த படத்தை உருவாக்குகிறோம் படப்பிடிப்பு மே 15 அன்று தொடங்குகிறது. என்றார்.