சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'காடன்'.. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் மும்மொழிப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் தெலுங்கில் 'ஆரண்யா' என்றும் இந்தியில் 'ஹாத்தி மேரே சாத்தி' என்கிற பெயரிலும் வரும் மார்ச்-26 அன்று ஒரே நாளில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்தி பதிப்பான 'ஹாத்தி மேரே சாத்தி'யின் ரிலீஸ் தேதி மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், அம்மாநில அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என மீண்டும் உத்தரவு போட்டுள்ளது.
இந்த உத்தரவு ஒருபக்கம், கொரோன அச்சத்தால் தியேட்டருக்கு மக்கள் வர அஞ்சுவது இன்னொரு பக்கம் என, இந்த சமயத்தில், 'ஹாத்தி மேரே சாத்தி' வெளியானால் மிகப்பெரிய வசூல் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் இதன் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். அதேசமயம் தமிழ் மற்றும் தெலுங்கில், ஏற்கனவே அறிவித்த தேதியில் (மார்ச்-26) இந்தப்படம் வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை.