நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் கடந்த நான்கு மாதங்களில் வெளியான 50க்கும் மேற்பட்ட படங்களில் ஓடிய ஒரே படம் 'மாஸ்டர்'. அப்படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் பழையபடி திரண்டு வந்தனர்.
அதற்கு முன்பும், பின்பும் வெளிவந்த பல படங்கள் சில நாட்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன. மக்கள் இன்னமும் தியேட்டர்கள் பக்கம் வருவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரானோ தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
அதனால், மக்கள் வருவார்களா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் 'காட்சிங்ல்லா Vs காங்' படத்திற்கு ஓரளவிற்கு மக்கள் தியேட்டர்கள் பக்கம் வர ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த பெரிய படமாக அடுத்த வாரம் கார்த்தி, ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள 'சுல்தான்' படம் வெளிவர உள்ளது. படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப் போகிறோம் என ஏற்கெனவே அதன் தயாரிப்பாளர் அறிவித்துவிட்டார்.
இந்தப் படத்தை தியேட்டர்காரர்களும் அதிகமாக நம்பியுள்ளனர். திரையுலகில் விசாரித்த போது படமும் நன்றாக வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 'மாஸ்டர்' படம் ஒரு மாற்றத்தைக் கொடுத்ததைப் போல 'சுல்தான்' படமும் கொடுக்கும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.