தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே உருவாகி வந்த கூலி திரைப்படம் நேற்று வெளியானது. ரஜினி படம் என்றாலே அதில் மற்ற மொழிகளை சேர்ந்த நடிகர்கள் கூட ஆர்வமுடன் கலந்து கொண்டு நடிப்பார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அப்படிப்பட்ட பிறமொழி நடிகர்களை தேடி பிடித்து நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுபவர் தான். அப்படி இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் தான் மலையாள நடிகர் பாபுராஜ்.
இவர் மலையாளத்தில் மிகப்பெரிய வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர். 3௦ ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருகிறார். இரண்டு படங்களை இயக்கியும் உள்ளார். தவிர பிரபல நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவரும் கூட. இப்போது நடைபெற்று வரும் நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வேட்பு மனு தாக்கல் செய்து பின் சர்ச்சை காரணமாக வாபஸ் பெற்றுக் கொண்டவர்.
தமிழில் ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் மெயின் வில்லனாக நடித்த இவரை கூலி படத்தில் ஒப்புக்கு சப்பானியாக ரஜினிக்கு பின்னால் நிற்கும் 18 பேரில் ஒரு நபராக நிற்க வைத்து வெறும் இரண்டு மூன்று காட்சிகளில் இடம் பெற வைத்து ஒரு வசனம் கூட பேசவிடாமல் வீணடித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.
இதற்கு முன் பீஸ்ட் படத்தில் கூட நல்ல நடிப்புத் திறமை கொண்ட மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, இயக்குனர் நெல்சன் தன்னை சரியாக பயன்படுத்தவில்லை, வீணடித்து விட்டார் என்று அந்த சமயத்தில் பரபரப்பாக குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.