ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என 'பாகுபலி' படம் வெளிவரும் வரை பெயரை வைத்திருந்தவர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஷங்கர். 'பாகுபலி' படம் வந்த இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றதும் அந்த 'பிரம்மாண்ட இயக்குனர்' என்ற பெயர் இயக்குனர் ராஜமவுலிக்குப் போய்விட்டது.
தற்போது இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தை நிறுத்திவிட்டு அடுத்து தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கப் போகும் படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் இயக்குனர் ஷங்கர்.
அந்தப் படம் 'முதல்வன்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 1999ம் ஆண்டு அர்ஜுன், மனிஷா கொய்ரலா நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் 'முதல்வன்'. அப்படத்தில் அர்ஜுன் 'ஒரு நாள் முதல்வர்' ஆக அதிரடி செய்திருப்பார்.
அந்த முதல்வர் கதாபாத்திரத்தில் தான் ராம் சரண் நடிக்கப் போகிறாராம். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படம் மூலம் ராம் சரண் தமிழில் அறிமுகமாகிறார் என்று சொல்லப்பட்டாலும், தெலுங்கு, ஹிந்தியில் மட்டும் தான் நேரடியாக உருவாக்கப் போகிறார்கள் எனத் தெரிகிறது. மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படலாம்.