ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
‛பருத்திவீரன்' படத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் பல படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தவர், இப்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். தெலுங்கில் அவர் நடித்துள்ள நாரப்பா(அசுரன் ரீ-மேக்), விராட பர்வம் படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளன. இதுதவிர சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடந்த பிலிம்பேர் நிகழ்ச்சியில் கருப்பு நிற உடையில் கிளாமராக உடையணிந்து பங்கேற்றார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து இருந்தார் பிரியாமணி. இதற்கு ஏராளமான லைக்ஸ்களும், கருத்துகளும் குவிந்தன.
ரசிகர் ஒருவர் பிரியாமணியின் இந்த கிளாமர் போட்டோவை பார்த்து, ‛என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?' என கேட்டார். அதற்கு, ‛‛எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள். அவர் சம்மதித்தால் நான் உங்களை மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்கிறேன்'' என கூலாக பதிலளித்தார் பிரியாமணி. இவரின் இந்த பதில் சமூகவலைதளங்களில் வைரலானது.