'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
கொலையுதிர்காலம் படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றபோது, ஒரு காலத்தில் கே.ஆர்.விஜய் போன்று கையெடுத்து கும்பிடுவது போல் இருப்பவர்களை கடவுள் வேடத்தில் நடிக்க வைத்தார்கள். ஆனால் இன்றைக்கு கைதட்டி கூப்பிடுவது போல் உள்ள நடிகைகளை கடவுள் வேடத்தில் நடிக்க வைக்கிறார்கள் என்று நயன்தாராவை குறித்து சர்ச்சையாக பேசினார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் நயன்தாரா குறித்து ஒரு மேடையில் பேசியிருக்கிறார். அதில், ‛‛நயன்தாரா என்ற நடிகையைப்பற்றி நான் பேசவே இல்லை. ஆனால் பத்திரிகையில் அதை பெருசாக்கி விட்டார்கள். நானும் சரி பேசினேன் என்று வைத்துக் கொள் என்று கூறிவிட்டேன். உடனே திமுகவில் பெண்களைப் பற்றி இழிவாக பேசினார் ராதாரவி. அதனால் அவரை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்குகிறோம் என்றார்கள். ஆனால் நான் அது என்ன தற்காலிகம், நிரந்தமாகவே போகிறேன் என்று நானே சொல்லிவிட்டுத்தான் வந்தேன். நயன்தாரா என்ன திமுகவில் கொள்கை பரப்பு செயலாளரா? என்ன உறவு உங்களுக்கு? உதயநிதிக்கும், அதுக்கும் உறவுன்னா அதுக்கு நான் என்ன செய்யுறது?'' என்று காரசாரமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.