காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கொலையுதிர்காலம் படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றபோது, ஒரு காலத்தில் கே.ஆர்.விஜய் போன்று கையெடுத்து கும்பிடுவது போல் இருப்பவர்களை கடவுள் வேடத்தில் நடிக்க வைத்தார்கள். ஆனால் இன்றைக்கு கைதட்டி கூப்பிடுவது போல் உள்ள நடிகைகளை கடவுள் வேடத்தில் நடிக்க வைக்கிறார்கள் என்று நயன்தாராவை குறித்து சர்ச்சையாக பேசினார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் நயன்தாரா குறித்து ஒரு மேடையில் பேசியிருக்கிறார். அதில், ‛‛நயன்தாரா என்ற நடிகையைப்பற்றி நான் பேசவே இல்லை. ஆனால் பத்திரிகையில் அதை பெருசாக்கி விட்டார்கள். நானும் சரி பேசினேன் என்று வைத்துக் கொள் என்று கூறிவிட்டேன். உடனே திமுகவில் பெண்களைப் பற்றி இழிவாக பேசினார் ராதாரவி. அதனால் அவரை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்குகிறோம் என்றார்கள். ஆனால் நான் அது என்ன தற்காலிகம், நிரந்தமாகவே போகிறேன் என்று நானே சொல்லிவிட்டுத்தான் வந்தேன். நயன்தாரா என்ன திமுகவில் கொள்கை பரப்பு செயலாளரா? என்ன உறவு உங்களுக்கு? உதயநிதிக்கும், அதுக்கும் உறவுன்னா அதுக்கு நான் என்ன செய்யுறது?'' என்று காரசாரமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.




