ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இந்தாண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில், பிரபல மலையாள நடிகரான மம்முட்டி, வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியும், மம்முட்டியும் தளபதி படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். நட்பின் அருமையைப் பேசும் அந்தப் படத்தில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும், தேவா என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டியும் நடித்திருந்தார்கள்.
அதை வைத்து தளபதி பட பாணியில் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துக்களைக் கூறியுள்ளார் மம்முட்டி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்டில், “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா” எனப் பதிவிட்டுள்ளார்.