தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
தமிழில் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தவர், 2017ம் ஆண்டு முஸ்தபா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பிரியாமணி, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் 'கொட்டேஷன் கேங்க்' படத்திலும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடிக்கிறார்.
மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளதால், சமூகவலைதளப் பக்கங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் பிரியாமணி. சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வரும் அவர், ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். இதனால் கலவையான விமர்சனங்களையும், கேள்விகளையும் அவர் எதிர்கொண்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், 'தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா?' என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த பிரியாமணி, 'என் கணவர் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்கிறேன்' என நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக மற்றொரு ரசிகர், 'உங்களது நிர்வாண புகைப்படங்களை வெளியிடுங்கள்' என பிரியாமணியிடம் ஆபாசமாகக் கேட்டிருந்தார். இதனால் கோபமடைந்த பிரியாமணி, 'முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அவர்களது புகைப்படத்தை பதிவிட்டால், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன்' என பதிலடி கொடுத்துள்ளார்.
பிரியாமணியின் இந்தப் பதிலை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.