மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் இயக்குனரானவர் பாக்யராஜ் கண்ணன். அதையடுத்து கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு என பலர் நடித்துள்ள சுல்தான் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இன்று திரைக்கு வந்துள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி இன்று அதிகாலை சென்னை பாடியில் உள்ள கிரீன் திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது கார்த்தியும் ரசிகர்களோடு அமர்ந்து சுல்தான் படத்தை பார்த்து ரசித்தார்.
இந்த நிலையில் சுல்தான் படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள். சுல்தான் படம் ரெமோவை விட பெரிய அளவில் வெற்றி பெறட்டும். கார்த்தி, ராஷ்மிகா, தயாரிப்பாளர் பிரபு ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.