இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக அவரது மருமகனான தனுசுக்கு அசுரன் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 67ஆவது தேசிய விருது வழங்கும் விழா மே மாதம் 3ஆம் தேதி வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அதோடு, தேசிய விருது வழங்கப்படும் அன்றைய தினமே ரஜினிகாந்துக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அந்த வகையில் ரஜினி, தனுஷ் இருவருக்கும் ஒரே நாளில் விருது வழங்கப்பட உள்ளது. அதிலும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இரண்டு பேர் ஒரே நாளில் உயரிய விருதுகளை பெறப்போகிறார்கள்.