இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், கத்ரினா கைப், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்துள்ள பாலிவுட் படம் சூர்யவன்ஷி. ரோகித் ஷெட்டி இயக்கி உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரோகித்தும் தயாரித்துள்ளார். முன்னணி நடிகர்கள் நடிக்க சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
கொரோனா தளர்வுகள் அமுலுக்கு வந்தாலும் வட இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டருக்கு கூட்டம் வராத காரணத்தால், சூர்யவன்ஷி வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 3 முன்னணி நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் என்பதோடு மூவருமே போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ள படம் என்பதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களும் படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார்கள்.
ஏப்ரல் 30ம் தேதி சூர்யவன்ஷி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அங்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சூர்யவன்ஷி வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையாவிட்டால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.