இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் சுல்தான் படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதும் படத்தின் வசூல் திருப்திகரமாக உள்ளது. தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்நிலையில் இணையதளத்தில் கார்த்தி, ராஷ்மிகா ரசிகர்கள் உடன் கலந்துரையாடினர். அப்போது பொன்னியின் செல்வன் படம் பற்றி கார்த்தியிடம் கேள்வி கேட்டார் ராஷ்மிகா.
அதற்கு, ‛‛பொன்னியின் செல்வன் இரண்டு பகாங்களாக வெளிவர உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. 60 ஆண்டுகாலமாக இதை படமாக்க தமிழ் சினிமா முயற்சித்து வந்தது. ஆனால் அது இப்போது தான் நடந்துள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் என பலரும் நடித்துள்ளோம். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா பிரச்னையால் படப்பிடிப்பு தாமதமாகிறது. 2022ல் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார் கார்த்தி.