படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பீட்சா, சூது கவ்வும், தெகிடி, அட்டகத்தி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். தற்போது 4ஜி, டைட்டானிக், காதலும் கவுந்து போகும் ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். மாயவன் மற்றும் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். மாயவன் 2ம் பாகத்தை இயக்கவும் உள்ளார்.
இதற்கிடையில் சி.வி.குமார் கொற்றவை என்ற பேண்டசி படம் ஒன்றையும் இயக்கி வருகிறார். 3 பாகமாக தயாராகும் இந்த படத்தின் முதல் பாக படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இதில் ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், சுபிக்ஷா உள்பட பலர் நடிக்கிறார்கள். எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதுகிறார்.
படம் பற்றி சி.வி.குமார் கூறியதாவது: வரலாற்றில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வை மையப்படுத்தி இந்த படம் தயாராகிறது. வரலாற்று காலம், நிகழ்காலம் என மாறி மாறி கதை பயணிக்கும். புதையல் வேட்டை தொடர்பான பேண்டசி கதை. அனைத்து விதமான சுவாரஸ்யங்களும் நிறைந்த படமாக இருக்கும். 3 பாகங்களாக படம் வெளிவருகிறது. முதல் பாகத்துக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்தடுத்த பாகங்கள் உரிய இடைவெளியில் வெளியாகும். முதல் இரண்டு பாகத்தின் கதைக்கான கிளைமாக்சாக 3வது பாகம் இருக்கும். என்றார்.