போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ்த் திரையுலகத்தில் சிலரது மறைவு தான் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது. சினிமாவில் எத்தனையோ பேர் வரலாம், போகலாம் ஆனால், ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடிக்க முடிகிறது. அந்த விதத்தில் மக்களின் மனங்களை வென்ற மூவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மரணம் அடைந்தது தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பாகும்.
2019ம் ஆண்டில் வசனகர்த்தா, நடிகர், நாடகக் கலைஞர் கிரேஸிமோகன், 2020ம் ஆண்டில் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் எஸ்பி பாலசுப்ரமணியம், இந்த 2021ம் ஆண்டில் நடிகர் விவேக் ஆகியோரது மறைவு சினிமாவை விரும்பிச் சென்றுப் பார்க்கும் ரசிகர்களையும், சினிமாவை நேசிக்கும் பல குடும்பத்தினரையும் வருத்தப்பட வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் அவர்களது மறைவுக்காக பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல் பதிவுகளைப் பதிவிடுவதே அதற்கு சாட்சி.