படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் |
வழக்கு எண் 18, ஒரு குப்பைக் கதை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மனிஷா யாதவ். சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டாலும் முழுமையாக சினிமாவை விடவில்லை. நல்ல படங்கள் வந்தால் நடிக்கவும் செய்கிறார்.
இந்நிலையில் கொரோனாவால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமையில் உள்ளேன், ஆனால் சீக்கிரம் குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைக்கு மோசமாக இல்லை. லேசாக மூச்சுத்திணறல் மட்டும் உள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை பெறுகிறேன். இந்த நோயை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என பதிவிட்டுள்ளார் மனிஷா.