பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
சின்னத்திரை நடிகராக இருந்த கவின், பிக்பாஸ் நிழ்ச்சி மூலம் பிரபலமானார். இப்போது ‛லிப்ட்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக, அமிர்தா ஐயர் நடிக்க, இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இந்த படத்தை வினீத் வரபிரசாத் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நிஷாந்தின் பாடல் வரிக்கு, பிரிட்டோ மைக்கேல் இசையில் இன்னா மயிலு.. என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருக்கிறார். இவருடன் குழந்தை நட்சத்திரம் பூவையாரும் பாடி உள்ளார். தற்போது இந்த பாடலை வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடலை பற்றி தயாரிப்பாளர் ஹேப்ஸி பேசுகையில், இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேலின் துள்ளலான மெட்டுக்கு, நிஷாந்த் எழுதிய இளமை ததும்பும் பாடல் வரிகளை, தன் மாயாஜால குரலால் அற்புதமாக பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் முகவரியாக அமைந்திருக்கும் இன்னா மயிலு.. என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாட சம்மதித்ததும், படக்குழுவினருக்கு உற்சாகம் பீறிட்டது. இந்த பாடலுக்கான பதிவின்போது அவர் வருகை தந்து, எங்களுக்குள் இருந்த பதற்றத்தை தணித்து, சூழலை இனிமையானதாக்கி, எளிதாகவும், மிக நேர்த்தியாகவும் அந்தப் பாடலை பாடினார். வசீகரமான அவரின் குரலில் இந்த பாடல் வரிகளை கேட்டபோது ரசிகர்களின் ஆனந்த மனநிலையில் நான் உள்ளிட்ட படக்குழுவினர் இருந்தோம். இன்னா மயிலு.. என்ற பாடலை பாடிய சிவகார்த்திகேயனுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.