மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் |
இரும்புத் திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள புதிய படம் 'சர்தார்'. ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பை இன்று(ஏப்., 25) பிற்பகல் 12.30க்கு வெளியிட திட்டமிட்டு, டுவிட்டர் தளத்தில் சில 'கோடுகளை' பதிவிட்டு, “மக்களே இதற்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா, இல்லையென்றால் இன்று 12.30 மணிக்கு கார்த்தி இதற்கு பதில் சொல்வார்,” என இயக்குனர் மித்ரன் டுவீட் செய்திருந்தார்.
டுவிட்டரில் இப்படி பதிவிட்டுவிட்டு ஊர் முழுவதும் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' என இப்படத்தின் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். ஒரு பக்கம் ஊருக்கே தெரியும்படி போஸ்டரையும் ஒட்டிவிட்டு, 12.30 மணிக்கு கார்த்தியின் டுவிட்டரையும் பாருங்கள் என இயக்குனர் கேட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்துள்ளார்கள்.
போட்ட பிளானை ஒழுங்கா போட வேணாமா, ஒரு படத்தில் வடிவேலு திருடப் போவதும், அதற்கு முன்பே அவரது ஆட்கள் போஸ்டர் அடித்து ஒட்டியதும்தான் ஞாபகத்திற்கு வருகிறது. 'சர்தார்' படத்திலாவது சஸ்பென்ஸை கரெக்டா வையுங்கப்பா...