சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 7-ந்தேதியில் இருந்து ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தனர். அந்த வகையில் சண்டை மற்றும் பாடல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் முழுக்க ஜார்ஜியாவில் படப்படிப்பு நடத்த திட்டமிட்டிருந்தார் நெல்சன்.
ஆனால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், விஜய் 65ஆவது படப்பிடிப்பிலும் சிலர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டதோடு, இந்தியாவிலும் லாக் டவுன் போடப்பட்டிருப்பதால், அடுத்தபடியாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டால் ஜார்ஜியாவிலேயே முகாமிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்பதால், படப்பிடிப்பை உடனடியாக பேக்அப் செய்து விட்டு விஜய்-65 படக்குழு இன்று சென்னை திரும்பியுள்ளது.
இந்நிலையில் விஜய் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.