தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நடிகையாக மாறியவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல், வர்மா ஆகிய படங்களில் நடித்த ரைசா, சமீபத்தில் கண்களின் கீழே கருத்துப்போய், வீங்கிய முகத்துடன் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். தோல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டபோது, பக்க விளைவு காரணமாக தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவரை குற்றம் சாட்டியதுடன் மேலும் தனக்கு அவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட தோல் மருத்துவர், ரைசாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், அவர் தான், தனது பெயரையும் புகழையும் கலங்கப்படுத்தியதற்காக தனக்கு மான நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் தரவேண்டும் என கூறியுள்ளார். மேலும் தான் அளித்த சிகிச்சையில் இதுபோன்ற பக்க விளைவுகள் முதலில் ஏற்படுவது சகஜம் என்றும் ஒருசில நாட்களில் இவை மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.
அதேசமயம் இந்த சிகிச்சையை மேற்கொண்டு வரும்போது மது அருந்தாமல், புகை பிடிக்காமல், வலுவான உடற்பயிற்சிகள் செய்யாமல்... என சில விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆனால் ரைசா அதை செய்ய தவறிவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.