தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நிசப்தம் படத்தை அடுத்து தெலுங்கில் யு.வி.கிரியேசன்ஸ் தயாரிக்கும் படத்தில் நவீன்பொலிஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் அனுஷ்கா. இந்தநிலையில், அவரைப்பற்றி மீண்டும் ஒரு திருமண செய்தி டோலிவுட்டில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.
அதாவது, பாகுபலி படத்தில் நடித்த பிறகு அப்பட நாயகனாக பிரபாசும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதையடுத்து அவர்கள் அதை மறுத்ததோடு இருவருமே நண்பர்கள் மட்டுமே என்று சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புளி வைத்தனர்.
அவ்வப்போது அனுஷ்கா அவரை திருமணம் செய்ய போகிறார், இவரை திருமணம் செய்ய போகிறார் என செய்திகள் வரும். பின்னர் அது அப்படியே அமுங்கி போகும். இந்நிலையில் தற்போது துபாயை சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும், திருமணத்திற்கு பிறகு துபாயில் அனுஷ்கா குடியேறி விடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனபோதும் வழக்கம்போல் இந்த செய்தி குறித்தும் அனுஷ்கா எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாக உள்ளார்.