இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் கேரளாவை பொறுத்தவரை முதல் அலையில் ஆரம்பத்தில் கவனமாக இருந்தாலும், பின்னர் வந்த நாட்களில் நிறைய பாதிப்பை சந்தித்தது. அதிலிருந்தே இன்னும் மீளாமல் இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது அலையையும் சமாளிக்கும் விதமாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அப்படி தான் இதுவரை கொரோனா தடுப்பூசி விஷயத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகளை தனது டுவிட்டர் பக்கத்திலும் அப்டேட் செய்துள்ளார் கேரளா முதல்வர். இதனை கண்டு வியந்துபோன நடிகை ஐஸ்வர்ய லட்சுமி முதல்வரை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதுபற்றி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஐ லவ் யூ சீப் மினிஸ்டர். நான் எந்த ஒரு கட்சியை சேர்ந்தவளும் அல்ல. ஆனால் நமது மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் கையாளும் விதம் என்னை பிரமிக்க வைக்கிறது. இந்த கடினமான நேரத்தில் உங்களது செயல்பாடுகள் மிகுந்த நம்பிக்கையை தருகிறது” என கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.
விஷாலுடன் ஆக்சன் படத்தில் ஜோடியாக அறிமுகமான மலையாள நடிகை' ஐஸ்வர்ய லட்சுமி, தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது