ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது |
கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையில் மக்களுக்கு பல வகையில் உதவி செய்து நிஜ ஹீரோவானார் சினிமா வில்லன் சோனு சூட். தற்போது 2வது அலையிலும் தனது பணியை தீவிரமாக தொடங்கி உள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்த கொரோனா நோயாளியை உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போகுமாறு கூறியுள்ளனர். அருகில் உள்ள மருத்துவமனைகளிலும் இடம் இல்லை. அதனால் உயிருக்கு போராடும் தன்னை காப்பாற்றுமாறு அவர் சோனுசூட்டுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதை அறிந்த சோனுசூட் அவருக்கு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததுடன் ஜான்சிக்கு ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பி அவரை ஐதராபாத்துக்கு கொண்டு சேர்ந்தார். தற்போது சிகிச்சை பெற்று வரும் , அவர் உடல்நலம் தேறி வருகிறார். இதனால் சோனு சூட்டுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகிறது.