கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் |
தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சாம்ஸ் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது முதன்முறையாக ஆபரேஷன் ஜுஜுபி படத்தின் மூலம் ஹீரோ ஆகிறார். இதில் அவர் காமெடி ஹீரோவாக நடிக்கவில்லை. சீரியசான ஹீரோவாக நடிக்கிறார். படத்தை அருண்காந்த் இயக்குகிறார். இப்படத்தில் சாம்ஸுக்கு மனைவியாக வினோதினி வைத்தியநாதன் நடித்திருக்கிறார். இவர்களுடன், படவா கோபி, ராகவ், ஜெகன்,சந்தானபாரதி, வெங்கட் சுபா, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான அருண்காந்த் கூறியதாவது: இது எனக்கு 3வது படம் ஏற்கெனவே கோக்கோ மாக்கோ, இந்த நிலை மாறும் படங்களை இயக்கி இருக்கிறேன். சாம்ஸை முதல் முறையாக ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறேன். மிகப்பெரிய ஆபரேஷன் ஒன்றை சர்வசாதாரணமாக கையாளுவது தான் கதை. அதனால் தான் படத்திற்கு ஆபரேஷன் ஜுஜுபி என்று தலைப்பு வைத்திருக்கிறோம்.
இது பேண்டஸி அரசியல் திரைப்படமாகும். ஒரு தனி மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்காக ஒரு நாடு உருவாக வேண்டும், என்ற சாமாணிய மக்களின் கனவு தான் படத்தின் கதை கரு. படம் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தயாராகி உள்ளது. என்றார்.