கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' |
சிலம்பரன் கதாநாயகனாக முதலில் நடித்த 'காதல் அழிவதில்லை' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. அடுத்து 'காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார். தமிழை விட தெலுங்கில்தான் அதிகப் படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
தெலுங்கில் 2015ல் வெளிவந்த 'ஜோதி லட்சுமி' படத்திற்குப் பிறகு நடிப்பதையும் நிறுத்திவிட்டார். தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தற்போது விஜய் தேவரகொன்டா நடிக்கும் 'லிகர்' படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
கடந்த சில நாட்களாக, சார்மி திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற செய்தி தெலுங்கு மீடியாக்களில் பரவியது. அதற்கு சார்மி அளித்துள்ள பதிலில், “எனது வேலையில் தற்போது சிறந்த ஒரு கால கட்டத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவ எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன். போலியாக எழுதுபவர்கள், வதந்திகள் ஆகியவற்றிற்கு குட்பை, சுவாரசியமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே தனது பல பேட்டிகளில் தான் எப்போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியவர், தற்போது அதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.