இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ஓம் ராவுத் இயக்கத்தில் பிரபாஸ் - கிர்த்தி சனோன் நடித்து வரும் படம் ஆதி புருஷ். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுள்ளது. அதையடுத்து ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை நடத்த ஹைடெக்கான செட் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த செட்டில் விரைவில் படப்பிடிப்பை தொடரவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக தெலுங்கு படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வரும் நேரத்தில் பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் செய்திகள் வெளியானதை அடுத்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை அடுத்து படப்பிடிப்பை தொடர்வதா? இல்லை நிறுத்தி வைப்பதா? என்பது குறித்து ஆதி புருஷ் படக்குழு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.