பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொரோனா பேரிடர் இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் நாளுக்கு நாள் கவலை அளிக்கும் விதத்தில் இருக்கிறது. புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு இந்த பேரிடரை சமாளிக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
ஒரு வாரத்திற்கு முன்பே முதல்வரின் நிவாரண நிதியை யார் ஆரம்பித்து வைப்பார்கள் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். முதல்வரே நிதி கேட்காத வரையில் அது பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லை. முதல்வர் கேட்டுக் கொண்ட பிறகுதான் முதல் ஆளாக சிவகுமார் குடும்பத்தினர் நேற்று முதல்வரைச் சந்தித்து 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கியுள்ளனர்.
அவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த நிதி வழங்கும் படலத்தை அடுத்து எந்தெந்த சினிமா பிரபலங்கள் தொடரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
சிறிய குழந்தைகள் கூட அவர்கள் சேர்த்து வைத்த உண்டியல் தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்ற செய்தி தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
யார் முதல்வராகப் பதவியேற்றாலும் அவர்களிடம் சென்று தங்களுக்கு வேண்டிய சலுகைகளைக் கேட்டுப் பெறுவதில் தான் திரையுலகத்தினர் முனைப்பு காட்டுவார்கள். மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் பல முக்கிய சங்கத்தினர் அவரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வைத்துவிட்டார்கள்.
இப்போது முதல்வர் தரப்பிலிருந்தே நிவாரண நிதி கேட்ட பின்பு பெரிய தொகையாக திரையுலகத்திலிருந்து ஒன்றே ஒன்றுதான் வந்துள்ளது. அஜித், விஜய் உள்ளிட்ட ஒரு சிலர் இன்னும் முதல்வருக்கு வாழ்த்து கூடத் தெரிவிக்கவில்லை. இனி வரும் நாட்களில் எத்தனை பிரபலங்கள் நிவாரணத் தொகை தர முன்வருவார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.