லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது சின்னத் திரையிலும் தனி முத்திரையைப் பதித்தவர் நடிகை ராதிகா. தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் 1978ம் ஆண்டு வெளிவந்த 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் 1981ல் மே 15ம் தேதி வெளிவந்த 'நியாயம் காவாலி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் வெளிவந்து இன்றுடன் 40 வருடங்கள் ஆகிறது.
கோதண்டராமி ரெட்டி இயக்கிய அந்தப் படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். அப்படம்தான் தமிழில் 1984ம் ஆண்டு மோகன், பூர்ணிமா ஜெயராம் நடிக்க 'விதி' என்ற பெரியல் ரீமேக்காக பெரும் வெற்றியைப் பெற்றது.
தன்னுடைய முதல் படமான 'நியாயம் காவாலி' படம் பற்றி ராதிகா இன்று டுவிட்டரில், “என்னுடைய வாழ்க்கையை வேறு ஒரு பாதையில் மாற்றிய முதல் தெலுங்குப் படம் 'நியாயம் காவாலி'. வாழ்க்கை முழுவதும் நண்பனான சிரஞ்சீவி, கோதண்டராமி ரெட்டி, சாரதா மேடம், தயாரிப்பாளர் கிராந்திகுமார். ஒரு முழு நடிகையாக எப்படி பயணத்தை ஆரம்பிப்பது என்ற விழிப்புணர்வைக் கொடுத்த படம்,” என குறிப்பிட்டுள்ளார்.