பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி உதவி அளிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யா - கார்த்தி குடும்பத்தினர், முருகதாஸ், உதயநிதி, வெற்றிமாறன், ஜெயம் ரவி குடும்பம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து நிதி உதவி அளித்தனர். நடிகர் அஜித் வங்கி பணபரிவர்த்தனை மூலம் நிதி உதவி வழங்கினார்.
இன்று நடிகர் ரஜினிகாந்த் தன் பங்கிற்கு ரூ.50 லட்சம் நிதியை முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கினார். இவரை தொடர்ந்து நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். வங்கி பணபரிவர்த்தனை மூலம் இந்த தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நடிகர் விக்ரம் தற்போது அவரின் 60வது படத்தில் தனது மகன் உடன் நடித்து வருகிறார். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கடந்தவாரம் தனது மகன் துருவ் உடன் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டு வந்தார் நடிகர் விக்ரம்.