ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தென்னிந்திய நடிகைகளில் தான் அளிக்கும் பேட்டிகளில் மனதில் பட்டதை பளிச் பளிச் என்று சொல்லி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் தமிழ் கலாச்சாரம் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் ஒரு தமிழரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த நிலையில் இணையத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது ஒரு ரசிகர், ஐபிஎல் போட்டி நடந்தபோது ராயல் சேலஞ்சர்ஸ் அணி தான் வெற்றி பெற்று கப்பை தட்டிச் செல்லும் என்று கூறி வந்தீர்கள். அப்படியென்றால் வீராட் கோலியைத்தானே உங்களுக்கு பிடிக்கும் என்று ஒரு ரசிகர் ராஷ்மிகாவிடத்தில் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ‛‛எனக்கு பெங்களூரு அணி தான் பிடிக்கும். அதேசமயம், வீராட் கோலியை விட தோனி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது திறமையும், மைதானத்தில் அவர் காட்டும் அணுகுமுறையும் தோனியிடத்தில் மிகவும் பிடித்த விசயங்கள்'' என்றார்.