போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கடந்த ஆண்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்தே புலம்பெயர்ந்த மக்களுக்கு பல வகையிலும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்த பாலிவுட் நடிகர் சோனுசூட்டின் சேவை இந்த கொரோனா தொற்றிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் சிலிண்டர் உதவி கேட்பவர்களுக்கு உடனுக்குடன் வழங்கி பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சோனு சூட்டின் இந்த சேவையைப் பாராட்டி ஆந்திராவிலுள்ள நெல்லூரில் அவரது கட்அவுட்டிற்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்துள்ளனர். அதோடு சோனுசூட்டை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இனிமேல் நாங்களும் இனி உதவுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்து பணிவான நன்றி என பதிவிட்டுள்ளார் சோனுசூட்.