கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

கார்த்தி நடித்த கைதி படம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று கார்த்தி இந்த படம் வெளிவந்த உடனேயே கூறியிருந்தார். ஆனால் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்த மாஸ்டர் , கமல் நடிக்கும் விக்ரம் படம், கைதி இந்தி ரீமேக், விஜய்யுடன் மற்றுமொரு படம் என ரூட் மாறி வேகமாக சென்று கொண்டிருந்தார். இதனால் கைதி 2ம் பாகம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று தோன்றியது.
இந்த நிலையில் கைதி இரண்டாம் பாகும் வரும் என்ற தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியிருக்கிறார். டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய அவர் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
முதல் பாகத்தில் கைதியான டில்லியின் பின்புலம் பற்றி அதிகமாக காட்டப்பட்டிருக்காது குறிப்பாக அவர் எதற்கு சிறைக்கு வந்தார் என்று கூறப்பட்டிருக்காது. படத்தின் முடிவில் வில்லன் அடைக்கலத்துக்கும், கைதி டில்லிக்கும் ஒரு கணக்கு பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டையும் முடிச்சுப்போட்டு இரண்டாம் பாகம் உருவாகும் என்று தெரிகிறது.