ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி |
சில ஆண்டுகளுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இது நாள் வரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொடர்ந்து சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பதிவிட்டு வருகிறார் சின்மயி. இந்நிலையில் மலையாளத்தில் ஞானபீட விருது பெற்ற கவிஞர் ஓஎன்வி குறுப்புவின் பெயரில் வழங்கப்படும் இலக்கியத்திற்கான விருது இந்தாண்டு இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறுகையில், ஓ.என்.வி. ஐயா எங்களின் பெருமை. அவரின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது. இப்படிப்பட்ட கவுரவமான விருதை பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு வழங்குவது அவமரியாதையாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இன்ஸ்டாவில், ‛‛பதினேழுக்கும் அதிகமான புகார்கள் அவர் மீது வந்துள்ளன. இதில் பல புகார்கள் தவறானவையாக கூட இருக்கலாம். ஆனால் இங்கே அதிகாரத்தில் இருக்கும் ஒருவருடைய நற்பெயர் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதே தவிர, அவரது மனித நேயம் அல்ல,,, கலை பெரிதா, கலைஞன் பெரிதா என என்னுடன் விவாதிக்க முற்பட்டால், மனிதநேயத்துடன் கூடிய ஒருவன் உருவாக்கும் கலை தான் சிறந்தது என்பேன். அடூர் கோபாலகிருஷ்ணனோ அல்லது விருதுக்குழு நடுவரோ யார் தீர்மானித்தது, குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்துவுக்கு இந்த பெருமையை வழங்குவதற்கு..?” என விமர்சனத்துடன் கூடிய கேள்வியையும் எழுப்பியுள்ளார் பார்வதி.