பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

அதிமுகவை சேர்ந்த முன்னாள் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் , 5 ஆண்டுகள் தன்னை ஏமாற்றி குடும்பம் நடத்திவிட்டு, மிரட்டுவதாக நாடோடி படத்தில் நடித்த துணை நடிகை சாந்தினி என்பவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை போலீசாரிடம் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்னிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றினார். என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து தொடர்பில் இருந்தார். 5 ஆண்டுகள் கணவன், மனைவி போல் வாழ்ந்தோம். நான் மூன்று முறை கர்ப்பமானேன். ஆனால் கட்டாயப்படுத்தி என்னை கருகலைப்பு செய்ய வைத்தார். அவருடன் தொடர்பில் இருந்த போது, ஆபாச புகைப்படங்களை அவர் எடுத்து வைத்திருந்தார்.
தற்போது மணிகண்டன் என்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறார். கூலிப்படை வைத்து கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகிறார். எனது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் அழிக்க வேண்டும். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.