பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழில் நிலா என்ற பெயரில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, ஜெகன் மோகினி, இசை, கில்லாடி, உள்பட பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை மீரா சோப்ரா. தற்போது நாஸ்டிக், மொலி பூவு படங்களில் நடித்து வருகிறார்.
மும்பை தானே பகுதியில் வசித்து வரும் மீரா சோப்ரா, போலியான அடையாள அட்டையை காட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தானே மாநகராட்சியின் பார்க்கிங் பிளாசா கொரோனா தடுப்பூசி முகாமில் அவர் தடுப்பூசி போட்டிருக்கிறார். இங்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படாத நிலையில் மருத்துவ பணியாளர் போன்ற அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி போட்டுள்ளார்.
அந்த அடையாள அட்டை இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து தனது டுவிட்டரில், நான் ஆதார் கார்டை பதிவேற்றி முன்பதிவு செய்து அதன்படியே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். இதற்கு பதிலிளித்துள்ள மாநகராட்சி அதிகாரி ஒருவர். தடுப்பூசி போட முன்பதிவு செய்ய ஆதார் கார்டு போதுமானது. ஆனால் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடாத இடத்தில் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே வயது வித்தியாசம் இன்றி தடுப்பூசி போடப்படும். அதற்கு அவர்கள் ஆதார் தவிர்த்து முன்கள பணியாளருக்கான அடையாள அட்டையை காட்ட வேண்டும். என்று பதில் அளித்திருக்கிறார்.
மீரா சோப்ரா போலியான அடையாள அட்டை கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்ற விசாரணையை மும்பை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.