ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். அதோடு, ஐதராபாத், வைசாக்கில் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருபவர், அடுத்தபடியாக பெண்களுக்கு தேவையான தற்காப்பு கலைகளை பயிற்சி கொடுக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். அதற்காக அந்த கலைகளை தற்போது தான் பயிற்சி எடுத்து வருகிறார்.
சமீபத்தில் ரகுல் பிரீத் சிங் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛என் குடும்பத்தினர் பலரும் இந்திய ராணுவத்தில் இருப்பதால் நான் குழந்தை பருவத்தில் இருந்தே மிகுந்த ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டேன். நான் உடற்பயிற்சி செய்து உடம்பை வலுவாக வைத்திருப்பதற்கும் அதுவே காரணம். மேலும், இதுதவிர சிறுவயதில் இருந்தே எனக்கு கோல்ப் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உண்டு. அந்த வகையில், பள்ளி காலத்தில் 14 முறை தேசிய கோல்ப் போட்டிகளில்விளையாடியிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.