ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். அதோடு, ஐதராபாத், வைசாக்கில் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருபவர், அடுத்தபடியாக பெண்களுக்கு தேவையான தற்காப்பு கலைகளை பயிற்சி கொடுக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். அதற்காக அந்த கலைகளை தற்போது தான் பயிற்சி எடுத்து வருகிறார்.
சமீபத்தில் ரகுல் பிரீத் சிங் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛என் குடும்பத்தினர் பலரும் இந்திய ராணுவத்தில் இருப்பதால் நான் குழந்தை பருவத்தில் இருந்தே மிகுந்த ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டேன். நான் உடற்பயிற்சி செய்து உடம்பை வலுவாக வைத்திருப்பதற்கும் அதுவே காரணம். மேலும், இதுதவிர சிறுவயதில் இருந்தே எனக்கு கோல்ப் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உண்டு. அந்த வகையில், பள்ளி காலத்தில் 14 முறை தேசிய கோல்ப் போட்டிகளில்விளையாடியிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.